பட்டாசு குடோனில் தீ விபத்து இருவர் பலி

" alt="" aria-hidden="true" />


பட்டாசு குடோனில் தீ விபத்து இருவர் பலி:


 தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வரதராஜ் நகர் உள்ளன .


இந்த பகுதியில் சில ஆண்டுகளாக பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.


 கோபி வயது 50, பாண்டியம்மாள் வயது 45 ,நிவேதா வயது 17 ,ரவி வயது 20, ஆகியோர் பட்டாசு தொழிலில் ஒரே குடும்பத்தில் ஈடுபட்டு வந்தனர்.


இன்று  காலை சுமார் 11 30 அளவில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராமல் தீ விபத்து ஏற்பட்டன இந்த தீ விபத்தில் கோபி மனைவி பாண்டியம்மாள் கோபி மகள் நிவேதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 


 இந்த தீ விபத்தினால் அருகிலிருந்த மூன்று வீடுகள் இடிந்து நொறுங்கி போனது


 இந்த சம்பவம் தகவலறிந்து பெரியகுளம் தீயணைப்பு துறையினர் வருகை தந்து தீயை அணைத்து போராடி வருகின்றனர்.


 மேலும் பொருள் சேதம்  ஏற்படாமல் இருக்க சுற்றுப்பகுதியில் பரவும் தீயை தீயணைப்புத் துறையினர் அணைத்து வருகின்றனர். 


 இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.


 இந்த தீ விபத்து பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Popular posts
பண்ருட்டியில் கொரோனா வைரஸ் தொற்றுஇருக்கலாம் என்றசந்தேகத்தின் பேரில்பொதுமக்களின் நலன் கருதி பாதுகாப்பு மற்றும் தனிமை படுத்த
Image
அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
Image
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பிற்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதை மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன்
Image
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
Image
கடையம் அருகே குளத்தில் மூழ்கி விவசாயி உயிரிழப்பு